×

மரக்காணம் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை திருடிய மர்ம நபர்கள்

 

மரக்காணம், டிச. 16: மரக்காணம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மரக்காணம் அருகே வசவன்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (45). இவரது குடும்பத்தினர் நேற்று மதியம் வீட்டை பூட்டாமல் கடற்கரைக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பீரோவை பார்த்தபோது ஒரு பவுன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி கொலுசை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதேபோல் இவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் கார்த்திக் (32) வீட்டிலும் 4 கிராம் பவுன் மற்றும் 750 கிராம் வெள்ளி கொலுசுகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். மேலும் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் இவர்களது வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் 2 வீடுகளில் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் 4 பைக்குகளில் தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இருவரும் சிசிடிவி கேமரா ஆதாரத்துடன் மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை மேற்கொண்டு ஆய்வு செய்து பைக்குகளில் தப்பிச்சென்ற மர்ம நபர்கள் என்பது குறித்து என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரக்காணம் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை திருடிய மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Marakanam ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...