×

தீ விபத்தில் கூலி தொழிலாளி வீடு சேதம்

 

திருப்பூர், டிச.16: திருப்பூர் மாநகராட்சி 6வது வார்டு பாண்டியன்நகர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பேபி. அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்களின் வீடு திடீரென தீ விபத்திற்குள்ளானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சேதமானதாக தெரிகிறது.

இதுகுறித்த தகவலறிந்த தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட முருகனுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உதவித்தொகையும் வழங்கினார். மேலும், சேதமடைந்த வீட்டினை சரி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், சேதமடைந்த ஆவணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், பகுதி செயலாளர் ஜோதி, கவுன்சிலர்கள், கோபால்சாமி, ராதாகிருஷ்ணன், வட்ட கழக செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post தீ விபத்தில் கூலி தொழிலாளி வீடு சேதம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Murugan ,Tirupur Corporation ,6th Ward, Pandiannagar, Enlightenment Nagar ,Dinakaran ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி