×

திருவாரூர் அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கி கீழே தள்ளி விட்ட மாணவர்கள்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்திலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு நேற்றுமுன்தினம் மாலை அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் டிரைவராக மகேந்திரன் (49), கண்டக்டராக பக்கிரிசாமி (51) இருந்தனர். அப்போது வேளூர் தண்டலைச்சேரி பகுதியில் பஸ் சென்றபோது, பஸ்சின் உள்ளே இருந்த கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக வாக்குவாதம் செய்தனர். இதை கண்டக்டர் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், கண்டக்டரை தாக்கினர். இதனையடுத்து டிரைவர், வேளூர் தண்டலச்சேரி அரசு கல்லூரி அருகே பஸ்சை நிறுத்தினார்.

இதில் ஆத்திரம் அடங்காத மாணவர்கள், கண்டக்டரை பஸ்சில் இருந்து கீழே தள்ளி விட்டு அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கண்டக்டருக்கு மண்டை உடைந்ததால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கண்டக்டர் பக்கிரிசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வேளூர் தண்டலச்சேரி அரசு கல்லூரி மாணவர்கள் சுர்ஜித்சிங் பர்னாலா, முருகதாஸ், பிரதரசன், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

The post திருவாரூர் அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கி கீழே தள்ளி விட்ட மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiruthaurapoondi ,Tirupakikadu ,Tiruvarur district ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...