×

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு… மக்களவையில் 5 எம்பிக்கள், மாநிலங்களவையில் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்

புதுடெல்லி : ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் 2 பேர் நுழைந்து முழக்க மிட்டனர். மேலும், வண்ண குண்டுகளையும் வீசினர். இதேபோல் நாடாளுமன்றத்தின் வெளிப்பகுதியில் பெண் உள்பட 2 பேரும் கோஷமிட்டனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் கூடியது. அப்போது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரைஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மக்களவை 2 மணிக்கு பிறகு மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன் ஆகியோர் மக்களவையில் இருந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். இதே போல் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், அவையின் மைய பகுதிக்கு வந்து தொடர்ந்து முழக்கமிட்டார். அவரை நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து சஸ்பெண்ட் செய்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது.

The post நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு… மக்களவையில் 5 எம்பிக்கள், மாநிலங்களவையில் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Lok ,Derrick O'Brien ,NEW DELHI ,People's ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை