×

இரணியல் அருகே கட்டுமான கம்பிகள் திருட்டு 3 பேர் மீது வழக்கு

திங்கள்சந்தை, டிச.14: இரணியல் அருகே முதியோர் இல்லம் கட்டும் பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரணியல் சாய்நகரை சேர்ந்தவர் கஸ்தூரிபாய். அறக்கட்டளை நடத்தி வருகிறார். தோட்டியோடு மௌனகுருசாமி கோவில் அருகில் முதியோர் இல்லம் கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பொருட்களும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தன்று கஸ்தூரிபாய் கட்டுமானம் நடந்து வரும் இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்தது 31/2 கட்டு இரும்பு கம்பிகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது பரசேரியை சேர்ந்த ரமேஷ் 2 பேருடன் சேர்ந்து கம்பிகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கஸ்தூரிபாய் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ரமேஷ் உட்பட 3 பேர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரணியல் அருகே கட்டுமான கம்பிகள் திருட்டு 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Iranial ,Dinakaran ,
× RELATED இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி