×

ஒய்எம்சிஏ சார்பில் 137வது ஆண்டு கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை விழா

ஊட்டி, டிச. 14:ஊட்டி ஒய்எம்சிஏ சார்பில் 137வது ஆண்டு கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை விழா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒய்எம்சிஏ தலைவர் பிரபுகுமார் தலைமை வகித்து பேசினார். ஊட்டி சிஎஸ்ஐ டிரினிட்டி சர்ச் ஜெர்ரி ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை வழங்கினார். இவ்விழாவில் ஊட்டி சிஎஸ்ஐ வெஸ்லி சர்ச், லைப் என் லைட் அசெம்பளி, சிஎஸ்ஐ ஹோலி டிரினிட்டி சர்ச், இம்மானுவேல் ஓபன் பைபிள் சர்ச், கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, கேத்தி சிஎஸ்ஐ வெஸ்லி சர்ச் உள்ளிட்ட பாடகர் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்களை பாடினர். விழாவில் ஒய்எம்சிஏ பள்ளி குழந்தைகள் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பைத் தெரிவிக்கும் வகையில் ஆடல், பாடல், நாடகம் என கலை நிகழ்ச்சிகள் பல நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா ஆடல் பாடலுடன் பலூன்களையும், இனிப்புகளையும் வழங்கி, குழந்தைகளை மகிழ்வித்து விழாவிற்கு சிறப்பை சேர்த்தார். இதில், போதகர்கள் சுதாகர், ராபின்சன், கிறிடோபர், பாஸ்டர்கள் எட்வின் சார்லஸ், ஜான்சன், ஒய்எம்சிஏ துணை தலைவர் சார்லஸ் சில்வஸ்டர், நிர்வாக குழுவினர்களான லேம்பர்ட் ஈஸ்டர் பால்ராஜ், சார்லஸ், பாஸ்கர் சதானந்த், ரமேஷ், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. முடிவில் செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

The post ஒய்எம்சிஏ சார்பில் 137வது ஆண்டு கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை விழா appeared first on Dinakaran.

Tags : YMCA ,annual Christmas carol service ,Ooty ,Christmas ,service ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...