கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பர்த்தமான் ரயில் நிலையத்தின் 2வது, 3வது பிளாட்பாரங்களின் ஒருங்கிணைந்த நடைமேடையில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. நீர்தேக்க தொட்டி இரும்பினால் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பழமையான அந்த நீர்தேக்க தொட்டி திடீரென இடிந்து ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் மீது விழுந்தது.இதில் 33 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில்,3 பேர் பலியாயினர்.மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post மேற்கு வங்கத்தில் பரிதாபம் ரயில் நிலையத்தில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.