×

ஊட்டி மரவியல் பூங்காவில் புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் துவக்கம்

ஊட்டி : ஊட்டி மரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சுற்றுலா நகரமான ஊட்டியில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. குறிப்பாக, தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் ஏராளமான பூங்காக்கள் உள்ளன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா ஆகியவை ஊட்டியில் உள்ளன. இது தவிர தமிழக மாளிகை பூங்காவும் உள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு சென்று அங்குள்ள பல்வேறு வகையான மரங்கள், மலர் செடிகள் பல்வேறு வகையான மூலிகை செடிகள் மற்றும் பெரணி செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதனால், இச்சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும். இதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பூங்காக்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது முதல் சீசனுக்காக ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் மரவியல் பூங்கா ஆகியவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் விதைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், போட்டியில் உள்ள மரவியல் பூங்காவிலும் தற்போது பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள பாத்திகள் நடவு பணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், புல் மைதானங்கள் சீரமைக்கப்பட்டு சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. நாள்தோறும் இயந்திரங்கள் கொண்டு இந்த பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சமன் செய்யப்பட்டு வருகிறது.

The post ஊட்டி மரவியல் பூங்காவில் புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty Arboretum ,Ooty ,Ooty Arboretum Park ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...