×

தேவகோட்டை நீதிமன்றத்தில் 6 வாராக் கடன் வழக்குகளுக்கு தீர்வு

 

தேவகோட்டை, டிச. 13: தேவகோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு மக்கள் நீதிமன்றம் மற்றும் தனியார் வங்கி ஆகியவை இணைந்து வங்கியின் வாராக் கடன் வழக்கு தீர்வு நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் வங்கி மேலாளர் ஸ்ரீநிவாசன், வழக்கறிஞர் குருமூர்த்தி, வங்கி கடன் மேலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கல்விக் கடன், விவசாய கடன், தொழில் கடன் ஆகிய வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதில் 55 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆறு வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ.7,49,000 வசூல் ஆனது. நிகழ்ச்சியில் முதுநிலை உதவியாளர் பானுமதி மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வலர் ரோஸி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தேவகோட்டை நீதிமன்றத்தில் 6 வாராக் கடன் வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Devakota ,Circle Legal Affairs Committee People's Court ,Devakottai ,Devakottai Court ,Dinakaran ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்