×

கொடைக்கானல் பகுதியில் 70க்கும் மேற்பட்ட மதுப்பாட்டிகள் பறிமுதல்: 3 பேர் கைது


கொடைக்கானல்: கொடைக்கானல் நகர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்ற 3 நபர்களையும், 70 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு இடங்களில் மது பாட்டில்கள் விற்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி தலைமையில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட விரோதமாக கள்ளசந்தையில் சிலர் மது பாட்டில்கள் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகம்படி இருந்த 3 நபர்களை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் ராமசாமி(35), நவீன் குமார் (27), ராஜ்(60) ஆகிய மூன்று நபர்களை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 70க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொடைக்கானல் பகுதியில் 70க்கும் மேற்பட்ட மதுப்பாட்டிகள் பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kodaikanal Nagar ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுவழி சாலை; பொதுமக்கள் கோரிக்கை!