×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி சிறுமி கூட்டு பலாத்காரம்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டீக்கடை நடத்தி வரும் சத்யம் என்பவரின் கடைக்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி வந்தார். அவர் சத்யனின் கடையில் டீ குடிப்பது வழக்கம். இந்த அறிமுகத்தை சாதகமாக பயன்படுத்தி, சிறுமியின் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டு தருவதாக சத்யன் கூறினார். பின்னர் அந்த சிறுமிக்கு உதவுவதாக கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றார்.

சிறிது தூரம் சென்றதும், மறைவான இடத்தில் வைத்து அந்த சிறுமியை சத்யன் மற்றும் இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சிறுமியை காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். சிறுமியின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

The post மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி சிறுமி கூட்டு பலாத்காரம்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Lucknow ,Satyam ,Lucknow Medical College Hospital ,
× RELATED உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு