×

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு உள்ளான பிரபாகரன் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..!!

திருச்சி: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு உள்ளான பிரபாகரன் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபாகரன் கொலை வழக்கில் லட்சுமணன், ரியாஸ், ராஜேஷ், பஷீர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவர் தலைமறைவானார். பிரபாகரன் கொலையில் கைதான 4 பேரிடமும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கு குறித்து கடந்த 9ம் தேதி பிரபாகரனிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியது. அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை வெட்டிக் கொன்றது.

The post திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு உள்ளான பிரபாகரன் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Ramajayam ,Prabhakaran ,Trichy ,Ramajayam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!