×

கூடலூர் அருகே தேவாலாவில் தார் கலவை ஆலைக்கு எதிராக கடைகளை அடைத்துப் போராட்டம்..!!

நீலகிரி: கூடலூர் அருகே தேவாலாவில் தார் கலவை ஆலைக்கு எதிராக கடைகளை அடைத்துப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தார் கலவை ஆலைக்கு எதிராக மக்கள் 4வது நாளாக போராடும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டதுடன் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. தார் கலவை ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post கூடலூர் அருகே தேவாலாவில் தார் கலவை ஆலைக்கு எதிராக கடைகளை அடைத்துப் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Dewala ,Kudalur ,Nilgiris ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் வீசிய பலத்த காற்றால் 1,500 வாழை மரங்கள் சேதம்..!!