×

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெருக்கடி

 

திருச்சுழி, டிச.11: திருச்சுழியில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருச்சுழியில் தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம் உள்பட ஏராளமான அரசு அலுவலகம் இயங்கி வருகின்றன. இதுபோக சுற்றிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும் தினந்தோறும் 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஸ்டேட் வங்கி பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்வதால், பலரும் சிரமம் அடைகின்றனர்.

அருப்புக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இவ்வழியாக தான் செல்ல வேண்டும். ஆலடிபட்டி பகுதியில் குவாரிகள் அதிகமாக இயங்குவதால் தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் செல்வதால் அலுவலக நேரங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே முக்கிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Thiruchuthi ,Crisis ,Dinakaran ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...