×

திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா

 

திருப்புத்தூர், டிச.11: திருப்புத்தூரில் அமைந்துள்ள சிவகாமி உடனாகிய திருத்தளிநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷ விழாவையொட்டி நேற்று மாலை திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரர் பெருமானுக்கும் பால், திருமஞ்சனம், சந்தனம், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ திருத்தளிநாதரும், சிவகாமி அம்மனும் பிரதோஷம் மூர்த்திகளாக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர். மேலும் பிரதோஷத்தில் திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.

The post திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Pradosha ,Tiruthalinathar Temple ,Tiruputhur ,Sivakami ,Pradosha Festival ,Thiruthalinathar Temple ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா