×

வாலிபர் மீது போக்சோ வழக்கு

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார்(26). தனியார் ஊழியர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் சிறுமியிடம் நெருங்கி பழகிய அவர், அச்சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த மே மாதம் முதல் பலமுறை அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் பாதுகாவலர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார், குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

The post வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kumar ,Nanguneri ,Nellai district ,Dinakaran ,
× RELATED பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலா மையமாக மாற்ற முடிவு!