×

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி அருகே சோளக்கொட்டாய் வெங்கட்டானூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா(26). கார்பெண்டரான இவர், வேலைக்கு சென்ற இடத்தில் கல்லாவி பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா என்பவரை காதலித்து. கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில், இளையராஜா அடிக்கடி மது அருந்தி விட்டு, வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார். இதனால், அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். கடந்த 7ம் தேதி, இளையராஜா மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி காணாதது குறித்து, குடும்பத்தினர் விசாரித்து கடுமையாக திட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த இளையராஜா, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, இளையராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மதிகோண்பாளையம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

The post காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Ilayaraja ,Solakkottai Venkatanoor ,Kallavi ,
× RELATED சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு...