×

டூவீலர்கள் மோதி முதியவர் பலி

தர்மபுரி: மாரண்டஅள்ளி, சீனிப்பட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்ராஜ்(67). இவர், மாரண்டஅள்ளியில் இருந்து எக்காண்டள்ளிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இதில், படுகாயமடைந்த சாம்ராஜ் கதறி துடித்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, சாம்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Samraj ,Marandaalli, Seenipattam ,Marandaalli ,Ekandalli ,Dinakaran ,
× RELATED காயங்களுடன்கிடந்தவர் சாவு