×

குளியலறையில் வழுக்கி விழுந்த சந்திரசேகரராவுக்கு அறுவை சிகிச்சை

திருமலை: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் தேர்தல் தோல்விக்கு பின்னர் கஜ்வேலில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு குளியலறையில் அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சந்திரசேகரராவ் 8 வாரங்களுக்கு ஓய்வு பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று மருத்துவர்கள் வாக்கர் மூலம் நடப்பதற்கு பயிற்சி வழங்கினர்.

The post குளியலறையில் வழுக்கி விழுந்த சந்திரசேகரராவுக்கு அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Chandrasekharara ,Tirumala ,Telangana ,Chief Minister ,Chandrasekhar Rao ,Gajvel ,Chandrasekarara ,
× RELATED டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது: தெலங்கானாவில் பரபரப்பு