×

வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம்

சேந்தமங்கலம், டிச.9: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில், சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், பணியின் போது இறந்து விட்டால், அரசு கருணை அடிப்படையில், அவரது வாரிசுதாரர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில், சேந்தமங்கலம் வட்ட தலைவர் சாமுவேல், செயலாளர் சிதம்பரம், பொருளாளர் அன்பு, துணைத் தலைவர் செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Tamil Nadu Revenue Village Employees Association ,Revenue Village Employees Association ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை