×

மதுப்பழக்கத்திற்கு எதிராக மணமேல்குடியில் கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்

 

அறந்தாங்கி,டிச.9: மணமேல்குடி பஸ் ஸ்டாண்டு மதுப்பழக்கத்திற்கு எதிராக கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தை அறந்தாங்கி வருவாய் கோட்ட கலால் ஆய்வாளர் முத்தரசு தொடங்கி வைத்தார்.விழிப்புணர்வு பிரசாரத்தில் தஞ்சாவூர் வைரம் நாடக சபா கலைக்குழுவினர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சட்டத்திற்கு புறம்பான செயல் எனவும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் போதைப்பழக்கம் போதை மருந்து விற்பது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கலைக்குழுவினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதே போல் கட்டுமாவடி,ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் வினோத் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மதுப்பழக்கத்திற்கு எதிராக மணமேல்குடியில் கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Mamelgudi ,Arantangi ,Mamaelgudi ,
× RELATED அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்