×

திருட்டு வழக்கில் கைதானதால் ஆத்திரம் வீட்டிற்குள் மனைவி சேர்க்காததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை கோவிலூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேலு (37), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில், திருட்டு வழக்கு ஒன்றில் அண்ணாசாலை போலீசார், வேலுவை கைது செய்தனர். இதனால், மனமுடைந்த அவரது மனைவி, சிறையில் இருந்து விடுதலையாகி வந்த வேலுவை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேலு நேற்று அதிகாலை 2 மணிக்கு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேலு மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்….

The post திருட்டு வழக்கில் கைதானதால் ஆத்திரம் வீட்டிற்குள் மனைவி சேர்க்காததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Velu ,Amman Koil Street ,Sindathirippet Kovilur ,Chitra ,
× RELATED இடிந்து விழும் நிலையில் ஊராட்சிமன்ற...