×

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை,டிச.8: மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மகாபாரதி வழங்கினார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று படைவீரர் கொடிநாள் விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, கொடிநாள் வசூலினை துவக்கி வைத்து முன்னாள் படைவீரரை சார்ந்தோர்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள், படையில் பணிபுரிவோரின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 7ம் தேதியான நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் படைவீரர் கொடிநாள் விழா நடைபெற்றது. நேற்று காலை உண்டியலில் பணம் செலுத்தி கொடிநாள் வசூலினை துவக்கி வைத்தார். இக்கொடிநாள் விழாவின்போது வசூல் செய்யப்படும் தொகையானது முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்காக செலவிடப்படுகிறது.

முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் 7 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும். 3 நபருக்கு வங்கிக்கடன் வட்டிமானியமும், 3 முன்னாள் படைவீரரின் சார்ந்தோர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவியும், 3 முன்னாள் படைவீரரின் சார்ந்தோர்களுக்கு கண் கண்ணாடி நிதியுதளியும் என மொத்தம் 16 பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,41,024 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ மணிமேகலை, முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர், ராகவேந்திரன், மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthura district ,Mayiladuthura ,Collector ,Mahabharati ,Mayiladuthura District Collector's Office ,
× RELATED தரங்கம்பாடி பகுதியில் குறுவை நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்