பரமக்குடி, டிச.8: பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர் ஊராட்சி சத்திரக்குடி பகுதியில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே சத்திரக்குடி பொதுமக்கள் எம்எல்ஏ முருகேசனிடம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ முருகேசன் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் குடிநீர் தேவையை சரி செய்ய வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் ரூ.49 லட்சம் மதிப்பில் சிறப்பு திட்டத்தின் கீழ் பொட்டிதட்டி கருத்தனேந்தல் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, சத்திரக்குடி கிராமத்திற்கு பைப்லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இதற்கான பணியினை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் அப்பாஸ் கனி, பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், போகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன், கருத்தனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, சேமனூர் ராஜேந்திரன், நயினார் கோவில் ஒன்றிய துணை செயலாளர் திலகர், கருத்தனேந்தல் கிளைச் செயலாளர் கணேசன் மற்றும் கிராம பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ரூ.49 லட்சம் மதிப்பில் சத்திரக்குடிக்கு புதிய குடிநீர் திட்டம்: முருகேசன் எம்எல்ஏ பணிகளை துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.