×

ஈரோடு அருகே பயங்கர விபத்து லாரி – வேன் நேருக்குநேர் மோதலில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி: பழநிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி முத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (27). இவரது மனைவி தேன்மொழி (21), மைத்துனர் குமரேசன் (17). இதேபோல், மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம் பள்ளி அருகே தானத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம், இவரது மனைவி தெய்வானை (55), மகள் மஞ்சுளா (எ) புவனேஸ்வரி (19), மைத்துனி அருக்காணி (50) மற்றும் முத்துசாமி (45) ஆகியோர் பழநி முருகன் கோயிலுக்கு நேற்று அதிகாலை ஆம்னி வேனில் சென்றனர். வேனை மஞ்சக்காட்டுவலசை சேர்ந்த படையப்பா (எ) பிரகாஷ் (24) ஓட்டிச் சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். பிற்பகல் 1 மணி அளவில் சிவகிரி அருகே குமாரவலசு என்ற இடத்தில் வந்தபோது வேனும், ஈரோட்டில் இருந்து முத்தூருக்கு சிமென்ட் பாரம் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில், டிரைவர் பிரகாஷ், தேன்மொழி, தெய்வானை, மஞ்சுளா (எ) புவனேஸ்வரி, அருக்காணி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். …

The post ஈரோடு அருகே பயங்கர விபத்து லாரி – வேன் நேருக்குநேர் மோதலில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி: பழநிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Palanik ,Modakurichi ,Mohankumar ,Eenjampalli ,Muthu Kauntanpalayam ,Erode district ,Thenmozhi ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது