சென்னை: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். வில்லிவாக்கம் சட்ட தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் மிக்ஜாம் புயலால் கொட்டிய மழையால் அப்பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் மின்சாரம், உணவு, உடை இல்லாமல் தவித்து வருவதாகவும் தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இயல்பு வாழ்கை திரும்ப அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிஸ்கட், போர்வை உள்ளிட்டவற்றை அப்பகுதி நிர்வாகிகள் நிவாரணமாக வழங்கினர்.
The post வில்லிவாக்கம் சிட்கோ நகர் மழை வெள்ளத்தால் பாதிப்பு: 3 நாட்களாக வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.