×

ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

சென்னை: ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஆவின் பால் விநியோகம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் மட்டுமே தனியார் பால் கிடைத்த நிலையில் அதுவும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக புகார்கள் இருந்தன. இந்த சூழலில் இன்று அதிகாலையில் சென்னையில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.

நிலமை நன்கு சீரடைந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி பகுதிக்கு வழக்கமான விநியோகத்தை விட கூடுதலாக 10,000 லிட்டர் பால் மாண்புமிகு அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஆவின் பால் & தனியார் பால் விற்பனையில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Avin ,Minister ,Mano Tangaraj ,Chennai ,Mano Thangaraj ,Dinakaran ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...