×

ரூ1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்பு : 3 பேர் கைது


முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பேட்டை பாமணி ஆற்றுகரை அருகே ஐம்பொன் சிலைகள் கடத்தி வந்து ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் ஒரு அடி உயரத்தில் ஒன்றரை கிலோ எடை கொண்ட பெருமாள் ஐம்பொன் சிலை இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், வீட்டில் இருந்தவர்கள் மன்னார்குடியை சேர்ந்த பிரபு (46), அழகர் (24), தங்கமணி (40) என்பதும், மன்னார்குடியிலிருந்து சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதும், வியாபாரிகள் வருவதற்குள் போலீசாரிடம் சிக்கி கொண்டதும், இந்த ஐம்பொன் சிலையின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ1 கோடிக்கும் மேல் இருக்கும் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பிரபு, அழகர் ஆகியோரை கைது செய்தனர்.

The post ரூ1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்பு : 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Muthuppettai ,Thiruvarur District ,Patet Palamani River ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் பகுதியில் ரூ.25 ஆயிரம் தடை...