×

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி

பெரம்பலூர்: பயிர்க்காப்பீடு செய்ய வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார். 2023 ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நாளைக்குள்(5ம் தேதி) பயிர்க் காப்பீடு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2023 ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆலத்தூர் மற்றும் பெரம்பலூர் வட்டாரத்தில் உள்ள கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூர் மற்றும் குரும்பலூர் பிர்காக்களில் அடங்கியுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

The post பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Karpagam ,Rabi ,Dinakaran ,
× RELATED அடுத்த 4 நாட்களுக்கு வெப்பத்தின்...