×

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.6 புள்ளி பதிவானது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கம் மிண்டானோ பகுதியை மையமாக கொண்டு தாக்கியது. இதனர் நிலநடுக்கம் 48 கிமீ பரப்பளவு உணரப்பட்டது.

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் நேற்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது நிலநடுக்கம் ஏற்பட்ட போது மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. அதே போல் லடாக்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Earthquake in the ,Tsunami Warning ,Manila ,Philippines ,in the Philippines ,Dinakaran ,
× RELATED தைவான் கிழக்கு கடற்கரையில்...