×

ஏரியில் மூதாட்டி சடலம்

 

மரக்காணம், டிச. 3: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா(60). இவர் ஊரணி கிராமத்தின் அருகில் இருக்கும் அனுமந்தையில் உள்ள அவரது பெண் வீட்டிற்கு கடந்த 29ம் தேதி சென்றுள்ளார். அன்றே அவரது பெண் வீட்டில் இருந்து ஊரணிக்கு வந்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும், விசாரித்தும் பார்த்துள்ளனர்.

ஆனால் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என தெரியவில்லை. இந்நிலையில் நேற்று காலை மரக்காணம் அருகே பனிச்சமேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக ராதாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது காணாமல் போன ராதாவின் உடல் என தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராதாவின் மகன் மதியழகன்(30) மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏரியில் மூதாட்டி சடலம் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Radha ,Urani village ,Villupuram district ,Orani ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...