×

புயல் நேரத்திலும் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மின்தடை ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புயல் நேரத்தில் மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் எந்தவொரு இடத்திலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். குடிநீர் விநியோகம், தகவல் தொடர்பு, மின்விநியோகம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post புயல் நேரத்திலும் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Gold South Rasu ,Chennai ,Minister ,Dhanaram Thenarasu ,Minister Gold ,South Russia ,Dinakaran ,
× RELATED அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு