×

வரலாறு காணாத உயர்வு.. ஒரு சவரன் ரூ.47,000ஐ தாண்டியது.. ஒரு கிராம் ரூ.6,000ஐ நெருங்கியது : வேதனையில் இல்லத்தரசிகள்!!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. விலை சரிவால் தீபாவளி பண்டிகை நேரத்தில் தங்கம் விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்தது. தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

சில தினங்களில் பெயரளவுக்கு மட்டும் குறைந்து வந்தது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ. 47,320க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ. 65 அதிகரித்து, ரூ.5,915க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது. இந்த நகை விலை உயர்வு சாமானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை இன்று (டிச.2) கிராம் 83.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.83,500-க்கு விற்பனை ஆகிறது.

The post வரலாறு காணாத உயர்வு.. ஒரு சவரன் ரூ.47,000ஐ தாண்டியது.. ஒரு கிராம் ரூ.6,000ஐ நெருங்கியது : வேதனையில் இல்லத்தரசிகள்!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக...