×

இரட்டை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், எடப்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் பிரகாஷ்(32). இவரது மனைவி கோமதி (28). இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சர்வஜித், சஷ்திகா என்ற இரட்டை குழந்தைகள். திருப்பூரில் பிரகாஷ் நடத்தி வந்த எம்ப்ராய்டிங் கம்பெனி யில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். கோமதியின் தந்தை சிவாஜியும், அவருக்கு அடிக்கடி பணம் கொடுத்து உதவி வந்துள்ளார்.

இந்நிலையில், கடன் தொல்லையால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையில் இருந்த கோமதி, நேற்று மதியம் தனது இரட்டை குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து விட்டு, தூக்கிட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், கோமதி மற்றும் குழந்தை சர்வஜித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை சஷ்திகாவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post இரட்டை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vazhappady ,Prakash ,Muniyan ,Edapattiputhur ,Bethnayakanpalayam ,Salem district ,Gomati ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்