×

ஆலப்புழா அருகே இரட்டைக் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை: கடன் தொல்லையால் விபரீத முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி என்ற பகுதியை சேர்ந்தவர் சுனு (33). இவரது மனைவி சவும்யா (30). கணவன்-மனைவி 2 பேரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஆதி, ஆதில் என்ற 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் 2 பேரும் 3 வயதான இரட்டைக்குழந்தைகள். சுனு, சவும்யா தம்பதிக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது குழந்தைகள் 2 பேரும் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தனர். சுனுவும், சவும்யாவும் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களையும் கைப்பற்றி னர். இரட்டைக் குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு கணவன், மனைவி 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post ஆலப்புழா அருகே இரட்டைக் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை: கடன் தொல்லையால் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Alappuzha ,Thiruvananthapuram ,Thalavadi ,Alappuzha, Kerala ,Savumya ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!