×

புகையிலை பொருட்கள் விற்றதாக 3 பேர் கைது

சாத்தான்குளம், டிச. 1: பேய்க்குளம், பொத்தகாலன்விளை, தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம், பேய்குளம் பகுதியில் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலைபுதூரில் குணசேகர் (56) என்பவர் நடத்தி வரும் பெ்டடிக்கடையில் சோதனையிட்டனர். அங்கு தடை செய்யப்பட்ட 10 கிராம் எடையுள்ள 8 புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தட்டார்மடம் எஸ்ஐ ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், ரோந்து செல்லும்போது பொத்தகாலன்விளை அந்தோணி பாஸ்கரன் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை கண்டறிந்தனர். அவரை கைது செய்த போலீசார், கடையில் இருந்து 15 கிராம் எடையுள்ள 15 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் எஸ்ஐ முத்துகிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவை சேர்ந்த பகவதி(51), தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நடத்தி வரும் டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 322 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்றதாக 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Beikkulam ,Pothakalanvilai ,Thoothukudi ,
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது