×

கூர்த்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்கம்

காரைக்குடி, டிச.1: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் சார்பில் சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. இதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும்.

சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை,நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 100 பஸ் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும். கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிக்கும்.

திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 75 பஸ் என இன்று மற்றும் நாளை 175 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 3, 4ம் தேதிகளில் சென்னை தடத்தில் 100 சிறப்பு பஸ்களும், பிறதடங்களில் 75 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தவிர மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

The post கூர்த்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Tamil Nadu Government Transport Corporation ,Tamil Nadu Government Transport Corporation ( ,Kumbakonam) Ltd ,
× RELATED போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு...