×

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஒப்பந்தப்புள்ளி ஏதும் தற்போது கோரவில்லை: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் உத்தேச மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் கோரப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் முன்னோடி திட்டமாக 37 பள்ளிகளில் மாநகராட்சியின் சார்பில் காலை உணவு தயாரித்து தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின்படி இதற்காக அமைக்கப்பட்ட உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 65030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர்அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஒப்பந்தப்புள்ளி ஏதும் தற்போது கோரவில்லை: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...