×

மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு மனைவி பதில் கூறாததால் 2வது மனைவியுடன் தங்கியிருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி: வாட்ஸ் அப்பில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு, முதல் மனைவி பதில் கூறாததால், 2வது மனைவியுடன் தங்கி இருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் (35). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில், மனைவி ரேவதி ஈரோட்டில் சொந்தமாக ரத்த பரிசோதனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா என்பவர் இந்த ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், ஆரோக்கியநாதனுடன் கௌசல்யா பழகி வந்தார். இது நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து, கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆரோக்கியநாதனும், கௌசல்யாவும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். மேலும், கடந்த 24ம் தேதி தனது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் முதல் மனைவி ரேவதியின் செல்போனுக்கு ஆரோக்கியநாதன் வாட் அப் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு ரேவதி பதில் கூற மறுத்து விட்டார்.

இதனால், மனம் உடைந்த ஆரோக்கியநாதன் நேற்று நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கௌசல்யா அலறி கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காயார் போலீஸ் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், ஆரோக்கியநாதனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு மனைவி பதில் கூறாததால் 2வது மனைவியுடன் தங்கியிருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...