×

விஜயகாந்த் விரைவில் குணமடைந்து இல்லம் திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்: ஓபிஎஸ்!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து, தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற இறைவனை பிராத்திக்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதை தொடர்ந்து விஜயகாந்த் விரைவில் குணமடைந்து, தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற இறைவனை வேண்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில்; உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பவும், தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றவும் எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post விஜயகாந்த் விரைவில் குணமடைந்து இல்லம் திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்: ஓபிஎஸ்! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,O. Panneerselvam ,God ,DMUDIK ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு...