×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு, நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஏரி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால், நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், தற்போது 22.35 அடி தண்ணீர் உள்ளது.

அதேபோல் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 3,210 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மேலும், ஏரிக்கு நீர்வரத்து 514 கன அடியாகவும், ஏரியிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 163 கன அடியாகவும் உள்ளது. இதற்கிடையே, செம்பரம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நாள்தோறும் மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி, ஏற்கனவே நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு, முதற்கட்டமாக 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. 2ம் கட்டமாக கூடுதலாக 800 கன அடி உபரிநீர், ஏரியின் 16 மற்றும் 19 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து 3ம் கட்டமாக ஏரியிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் அடையாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Semperambakkam Lake ,Chennai ,SUBURBS ,Dinakaran ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்