×

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 28 பேர் மனு

தூத்துக்குடி, நவ. 30: தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பாலாஜிசரவணன் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 28 பேர் மனு அளித்தனர். தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார் அளிக்க வந்த 28 மனுதாரர்கள் தங்கள் குறைகளை எஸ்பியிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 28 பேர் மனு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi SP ,Thoothukudi ,SP ,Balajisaravanan ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...