×

பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல மெட்ரோ ரயில் சேவை

சென்னை: பச்சை வழித்தடத்தில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணிகள் நடந்தது. இதன் காரணமாக, நேற்று மதியம் 1.45 மணி முதல் 2.15 மணி வரை வடபழனி, அரும்பாக்கம் மற்றும் புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சரிசெய்தனர். தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல மெட்ரோ ரயில் சேவை appeared first on Dinakaran.

Tags : Metro train ,Green Line ,CHENNAI ,Arumbakkam metro station ,Metro train service ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்