×

இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


சென்னை: இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். 2008-ஆம் ஆண்டிலேயே 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கினார். இந்தியாவிலேயே அதிகளவில் மக்கள்தொகைக்கேற்ப ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன.

அதனைக் குறைக்க, ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தைக் கடந்த 2021 டிசம்பரில் அறிமுகப்படுத்தினார். இந்த இரண்டாண்டுகளில், இன்று 2 இலட்சமாவது பயனாளிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் என்பதைவிட 2 இலட்சம் பேர்களின் உயிர்களும் உடலுறுப்புகளும் காக்கப்பட்டுள்ளன என்பதே சரி. சாலை விதிகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வோம்! குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்வோம்!

The post இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : INNUIR KAPAMPOM ,M.U. K. Stalin ,Chennai ,Inuir Kapom ,PM K. Stalin ,
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...