×

சூதாடிய 4 பேர் கைது

தூத்துக்குடி, நவ. 28: தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில், கடந்த 25ம் தேதி மாலை எஸ்ஐ முனியசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாளமுத்துநகர் முருகன் தியேட்டர் அருகிலுள்ள காலி இடத்தில், லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் விஜய்(37), ஆசைத்தம்பி மகன் கிஷோர்குமார்(28), குரூஸ்புரத்தைச் சேர்ந்த சந்தனமுத்து மகன் முருகன், கிருஷ்ணராஜபுரம் பூபாலன் மகன் அன்புமணி(33) ஆகிய 4 பேரும் காசு வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு, ரூ.1,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post சூதாடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,SI Muniyaswamy ,Talamuthunagar ,Dinakaran ,
× RELATED மிக கனமழைக்கான எச்சரிக்கை:...