×

சட்டவிரோதமாக 900 கருக்கலைப்பு கர்நாடக டாக்டர் அதிரடி கைது

பெங்களூரு: மைசூருவில் சட்டவிரோதமாக 900 கருக்கலைப்பு செய்த டாக்டர் மற்றும் லேப் டெக்னீஷியனை போலீசார் கைது செய்தனர். மைசூரு நகரத்தில் டாக்டர் சந்தன் பலால் மருத்துவனை நடத்தி வந்தார். இவரது மருத்துவமனையில் நிசார் என்பவர் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக சட்டவிரோதமாக பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசில் புகார் அளித்தனர். அதன் படி மருத்துவமனை மேலாளர் மீனா, வரவேற்பாளர் ரிஜ்மா கான் ஆகியோரை கடந்த மாதம் கைது செய்தனர். இந்நிலையில் டாக்டர் சந்தன் பலால், லேப் டெக்னீஷியன் நிசார் நேற்று கைது செய்யப்பட்டனர். மொத்தம் 900 கருக்கலைப்புகளை சட்டவிரோதமாக டாக்டர் சந்தன் பலால் செய்தது விசாரணையில் தெரியவந்தள்ளது.

The post சட்டவிரோதமாக 900 கருக்கலைப்பு கர்நாடக டாக்டர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Mysuru ,Dinakaran ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...