×

அதிமுக எம்எல்ஏ திடீர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்களில் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிய மனுவுடன் மதுரைகலெக்டர் அலுவலகத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான உதயகுமார் எம்மற்றும் அதிமுகவினர் நேற்று வந்தனர். ஆனால், கலெக்டரிடம் 5 பேர் மட்டும் சென்று மனு கொடுக்கும் வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். திடீரென உதயகுமார் தலைமையிலான அதிமுகவினர் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மனுவை தாங்கள் கொண்டு போய் கொடுக்க முடியாது. கலெக்டரே நேரில் வந்து மனுவை பெற வேண்டும் என்று கூறி 2 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய உதயகுமார், முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன், சரவணன், கருப்பையா, மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட 57 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

The post அதிமுக எம்எல்ஏ திடீர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Madurai ,Madurai district ,Tirumangalam ,Melur ,Usilambatti ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை