×

சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்றபோது பிரேக் பழுதானதால் மின்சார ரயில் நிறுத்தம்: மாற்று ரயிலில் பயணிகள் பயணம்

பொன்னேரி: சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில், பிரேக் பழுது ஏற்பட்டதால், மாற்று ரயிலில் ஏறி பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியிலிருந்து சூலூர்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற புறநகர் ரயில், பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்தபோது திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டது.

பின்னர் பழுது சரிபார்க்கப்பட்டு மீஞ்சூர் நோக்கி ரயில் புறப்பட்டுச் சென்ற நிலையில் மீண்டும் பிரேக்கில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக, புறநகர் ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணித்த பயணிகள் அதிலிருந்து இறக்கப்பட்டு மாற்றுப் பாதை வழியாக பின்னால் வந்த கடற்கரை ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், ரயில்வே ஊழியர்களால் பிரேக் பழுது சரி செய்யப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு ரயில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பிற ரயில்களின் சேவை பாதிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சிரமமின்றி தங்களது பயணத்தை ேமற்கொண்டனர்.

The post சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்றபோது பிரேக் பழுதானதால் மின்சார ரயில் நிறுத்தம்: மாற்று ரயிலில் பயணிகள் பயணம் appeared first on Dinakaran.

Tags : Sulurpet ,Chennai ,Ponneri ,Sulurpettai ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் மின்சார ரயில்...