×

குவாரி நீரில் லாரி மூழ்கி கிளீனர் பரிதாப சாவு

 

விருதுநகர், நவ.27: விருதுநகர் அருகே கல்குவாரி தண்ணீரில் டிப்பர் லாரி மூழ்கி கிளீனர் உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், குற்றாலத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி(61). இவர் விருதுநகர் அருகே அரச குடும்பன்பட்டியில் உள்ள தனது உறவினருக்கு சொந்தமான கல்குவாரியில் டிப்பர் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை டிப்பர் லாரியை குவாரியில் நிறுத்தி டிரைவர் கருப்பையா மட்டும் இறங்கினார். ஆனால் வண்டியை ஆப் செய்யவில்லை, ஹேண்ட் பிரேக்கும் போடவில்லையாம்.

கீழே இறங்கிய டிரைவர் கருப்பையாவிடம் டீசல் கேனை கிளீனர் பாலுச்சாமி கொடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி பின்னோக்கி சென்று சுமார் 70 அடி வரை தண்ணீர் உள்ள குவாரியில் இறங்கி மூழ்கியது. இந்த விபத்தில் பாலுச்சாமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலுச்சாமியின் மனைவி தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் பாலவநத்தத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்பையா மீது சூலக்கரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post குவாரி நீரில் லாரி மூழ்கி கிளீனர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Kalquari ,Tenkasi district, ,Courtalam ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...