×

சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் 12 ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, நவ.26: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கும்மிடிப்பூண்டி- தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.50 மணிக்கு பதில் 4.40 மணிக்கும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் மாலை 4.40 மணிக்கு பதில் 4.50 மணிக்கும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.35 மணிக்கும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் 8.35 மணிக்கு பதிலாக நாளை முதல் 8.45 மணிக்கும் புறப்படும்.

மேலும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் நாளை 10.05 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே காலை 4.55 மணிக்கு புறப்படும் ரயில் நாளை முதல் 4.45 மணிக்கும் புறப்படும். செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே மாலை 5.45 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில் நாளை முதல் மாலை 6 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே மாலை 6.10 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில் நாளை முதல் 6.15 மணிக்கும் புறப்படும்.

செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இரவு 7.30 மணிக்கு புறப்படும் இரவு 9.35 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இரவு 8.05 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.55 மணிக்கும் புறப்படும். செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இரவு 8.30 மணிக்கு புறப்படும் இரவு 8.20 மணிக்கும் புறப்படும். காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில் காலை 6.10 மணிக்கு பதில் காலை 6.15 மணிக்கும், அரக்கோணம்- சென்னை கடற்கரை மாலை 5.50 மணிக்குப் புறப்படும் ரயில் நாளை முதல் மாலை 6 மணிக்கும் இயக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் 12 ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai coast ,Southern Railway ,Chennai ,Kummidipundi ,Tambaram ,
× RELATED சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில்...